3/5/13

திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அழைப்பிதழ்

1 கருத்துரைகள்
திருப்பூரில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை காண உங்களை ஆவலுடன் தமிழ்ச்செடி அமைப்பின் சார்பாக அன்போடு அழைக்கின்றோம். அழைப்பிதழை சொடுக்கி  பார்க்கவும். தொடர்புக்கு  கு. தங்கராசு அவர்கள் அலைபேசி எண் 984 39 440 44 ...
மேலும் வாசிக்க

2/6/13

ஒச்சப்பனும் நானும் .. நம் தாய்மொழிகளும்-தருமி

1 கருத்துரைகள்
எனக்கும் ஒச்சப்பனுக்கும் நடந்த சில கருத்துப் பரிமாற்றங்களை, தேவை கருதி, உங்கள் முன் வைக்கிறேன். 1830-ல் உருவான பெல்ஜியத்தின் அண்டை நாடுகள் நெதர்லேண்டு. ஜெர்மனி,. ப்ரான்ஸ், லக்ஸம்பெர்க். கிறித்துவர்களின் இரு கூறுகளின் நடுவே நடந்த குழப்பங்களால் இந்நாடு தனியாகப் பிரிந்தது. அப்போது பிரஞ்சு மொழிதான் அரசியல் மொழியாக இருந்தது. அரசியல், வகுப்பு வாத வேறுபாடுகள் பலவும் இருந்த இந்த நாட்டில் பின்னாளில் மொழியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தின.  1970 வரை ஒன்றாக இருந்த பெல்ஜியம் இந்தப் பிரச்சனைகளால் எழுந்த பல அரசியல் சிக்கல்களினால் பெடரல் ஸ்டேட்டாக மாறியது. இப்போது இது மூன்று பிரிவுகளாக உள்ளன: வடக்குப் பகுதியில் டச் மொழி பேசும் ஃபாளண்டர்ஸ்; தெற்குப் பகுதியில் பிரஞ்சு மொழி...
மேலும் வாசிக்க

2/1/13

மறக்க முடியாத தமிழாசிரியர்கள் - கவிப்ரியன்

2 கருத்துரைகள்
தமிழாசிரியர்களுக்கென்றே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பது இவர்களுக்கு முழுக்கப் பொருந்தும். தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டபின்தான் மற்ற பாடங்களையே படிக்க ஆரம்பிக்கிறோம்.  நாம் பிறந்தது முதல் உணர்ந்து, கேட்டு, பேசி வந்தாலும் ஒரு மொழியை முற்றிலுமாக கற்பது என்பது வாசித்தலையும், பிழையற எழுதுவதையும் உள்ளடக்கியது. இதற்கான முதல் வித்து ஊன்றப்படுவது தமிழாசிரியர்களால்தான்.                   ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நான் பயின்ற நாட்கள் பெரும்பாலும் நினைவில்லை என்றுதான் சொல்லவேண்டும். புளிய மரத்தடியில் எங்களை உட்காரவைத்து எங்களுக்கு வகுப்பெடுத்த  'மனோன்மணி' ஆசிரியையை நன்றாக நினைவிருக்கிறது. மதிய உணவுத்...
மேலும் வாசிக்க

1/27/13

டாலர் நகர் புத்தக வெளியீட்டு விழா - நேரலை காணொளி

4 கருத்துரைகள்
இன்று ( ஜனவரி 27, 2013. ஞாயிறு ) திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள டி.ஆர்.ஜி. ஹோட்டல் அரங்கத்தில் ஜோதிஜியின் "டாலர் நகரம்" புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நமது தமிழ்செடியில் காணொளி மூலம் காண.. Watch live streaming video from tamil24news at livestream.com வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் நமது சக பதிவருக்கு பகிருங்கள்......
மேலும் வாசிக்க

1/21/13

பாத்துமாவின்ட ஆடு - சில குறிப்புகள்!

0 கருத்துரைகள்
மலைச் சாரலைப் போல், அமைதியான அலைகடலைப் போல், ஆர்ப்பாட்டமில்லாத, ஆரவாரமில்லாத, அமைதியான, தென்றலைப் போல் மயிலிறகில் நம்மை வருடும் விதமான எழுத்தைப் படைப்பதில் மலையாள இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். நாம் பிரமிக்கும் தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர். மற்றும் எழுத்தாளர்களின் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் தமிழில் பஷீருடன் ஒப்பிட்டுப் பேச நம்  மொழியில் எவரும் இல்லை. அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிசச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். என்கின்றார். 1908ம் வருடம் கேரளாவில் வைக்கம் தாலுக்காவில் தலயோலப் பிரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசிய...
மேலும் வாசிக்க
 

மேலே செல்