12/26/12

சிறுகதை அறிமுகம் - வெட்டிக்காடு ரவி


சிலர் வாழ்ந்த பிறகு வரலாறாக மாறுவார்கள். சிலரோ வாழும் போதே மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு தங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வண்ணம் வரலாறு போல வாழ்ந்து காட்டுவார்கள்.

வலைதளத்தில் வெட்டிக்காடு ரவி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு கிராம பின்புலத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை தொடங்கியவர்.  ஆனால் கல்வி என்ற ஆயுதத்தை கனகச்சிதமாக பயன்படுத்தி இன்று இன்று வாழ்வில் உச்சத்தை எட்டியவர். 

தனது தளத்தில் தன் அடிப்படை வாழ்க்கையை, வாழ்ந்த வாழ்க்கையை எந்தவித சங்கோஜமும் இன்றி பட்டவர்த்தனமாக அப்படியே எழுதி இன்னமும் நான் கிராமத்து வாசிதான் என்று நிரூபித்தவர்.  

இவர் எழுத்தில் சொல்லப் போனால் தொடக்கத்தில் பள்ளிப் பருவத்தில் ஆங்கிலம் பேச முடியவில்லையே என்று வருந்திய காலமும் உண்டு. ஆனால் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருந்த காரணத்தால் சரியான முறையில் தமிழ் பேச முடியாமல் போய்விட்டதே என்ற வருந்திய காலமும் உருவானது. 

அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு பணி மாறுதலாகி தற்போது பெங்களூரில் தொலைதொடர்பு மென்பொருள் உருவாக்கம் சார்ந்த நிறுவனத்தில் அலுவலக ரீதியாக உயர்ந்த  பதவியில் இருக்கின்றார்.

இன்று தனது சொந்த மாவட்டமான தஞ்சாவூர் பகுதியில் தன்னாலான சமூக முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார். கல்லூரிகளின் வாயிலாக தான் கற்று வைத்திருக்கும் வித்தைகளை எந்தவித பிரதிபலன் எதிர்பார்ப்பும் இன்றி மாணவர்களுக்கு கலந்துரையாடல் மற்றும் கூட்டங்கள் வாயிலாக உதவிக் கொண்டு இருக்கின்றார்.


தமிழ்ச்செடியில் தமிழ் ஆசிரியர்கள் குறித்து தற்போது வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் இவரின் தளத்தில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் அனைத்துமே அவரின் பள்ளிக்கூட நினைவுகள் மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் குறித்த விசயங்கள் தான் அதிகமாக உள்ளது. 

அவரின் தளத்தை தமிழ்ச்செடி அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றது.


இன்று பெரும் பாலும் கல்வி மூலம் ஒரு உச்சத்தை எட்டியவுடன் தனது பதவி தரும் சுகம், அந்தஸ்த்து, செல்வாக்கு, பணம் போன்றவற்றை வைத்துக் கொண்டு தனக்கு தகுந்த மாதிரி ஒரு முகமூடியை அணிந்து கொண்டு வாழும் சமூகத்தில் திரு.ரவிச்சந்திரன் ஒரு வித்தியாசமான இளைஞர். 


மற்றவர்களுக்கு முன் உதாரணமான நண்பரும் கூட.

அவரின் கடிதம் கீழே.

“விதையுறக்கம்” புத்தகத்தில் வரும் கதைகளை என் பார்வையில் தமிழ்ச்செடியில் பகிர்ந்து கொள்கிறேன். உறவு சிறுகதையின் நகல் பக்கங்களை இணைத்துள்ளேன்.

***
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு விடுமுறைக்கு வந்திருந்தபோது மதிய வேளையில் ஏதாவது படிப்பதற்கு புத்தகம் கிடைக்குமா என்று என் மாமானாரின் அலமாரியை குடைந்து கொண்டிருந்தேன். 

மருத்துவ நூல்களாக இருந்தது. அப்போது ஒரு சிறிய தமிழ்ப் புத்தகம் என் கண்ணில் பட்டது....“விதையுறக்கம் - அ. அப்பாவு” என்ற புத்தகம். ஒன்பது சிறுகதைகள் கொண்ட புத்தகம்.  சரி படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்தவுடன் என்னால கீழே வைக்க முடியவில்லை. 

தஞ்சை கிராமத்து மொழியில்எழுதப்பட்ட ஒவ்வொரு சிறுகதையும் அப்படியே என்னை வெட்டிக்காட்டிற்கு கடத்திச் சென்றது.  கிராமத்து நிகழ்ச்சிகளை கண்முன்பே கொண்டு வந்து நிறுத்தியது. வைரமுத்துவின் கரிசல்வட்டார மொழியை படித்த என்க்கு என் ஊரின் மனிதர்கள், வட்டார மொழி ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது.  அன்று இரவு நெடுநேரம் தூங்காமல் இரண்டாவது முறையாக அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். அ.அப்பாவு அவர்கள் வடுவூர் புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். 

என் மாமனாரின் உறவினர். தமிழ்நாடு வணிவ வரித்துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒரு நேர்மையான அதிகாரி.எப்போதோ ஒரு முறை விடுமுறைக்கு இந்தியா வரும் நான் அப்பாவு அவர்களை நேரில் பார்த்தது இல்லை. அடுத்த நாள் காலை அப்பாவு அவர்களுக்கு தொலைபேசி நீண்ட நேரம் உரையாடினேன். அடுத்த முறை இந்தியா வந்தபோது சென்னையில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தேன்.


இந்த முறை தீபாவளி பண்டிகைக்கு தஞ்சைக்கு சென்றபோது சிங்கப்பூரில் இருந்து எடுத்த வந்த புத்தகங்களை மூட்டை கட்டி வைத்து என் மாமானார் வீட்டில் போட்டு வைத்திருந்த மூட்டைகளிலிருந்து  சில  புத்தகங்களை எடுத்து வந்தேன்.

 “விதையுறக்கம் புத்தகமும்’ அதில் ஒன்று. 

சில நாட்களுக்கு முன்பு மீண்டும் “விதையறக்கம்” புத்தகத்தை படித்தேன்.  ஒரு சிலகதைகளை என் பார்வையில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தில் நடந்த உண்ம சம்பங்களின் அடிப்படையில் எழுதப்பட்டகதைகள் இவை.

உறவு:

கிராமத்தில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த பையனும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தபெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்படும் பிரச்சணைகளை விவரிக்கும் கதை. அதே சமயம் குடியானவனுக்கும் குடி பறையனுக்கும் இடையேயான் நட்பையும்சொல்லும் கதை !!!

1980-களின் ஆரம்பத்தில் வயலில் போர்செட் போட்டு மோட்டார் வாங்குவதற்காக சென்னை வந்திருக்கும் புள்ளவராயன் குடிக்காடு விவசாயியின் பார்வையில் சொல்லப்படும் கதை. 1980-க்கு முன்பு நான் சிறுவனாக இருந்த காலத்தில் காவிரி கரை புரண்டு ஓட மூன்று போக விவசாயம் தஞ்சைத் தரணியில் அமோகமாக நடைபெறும். 

ஆனால்… காவிரித் தண்ணீர் பிரச்சணை காரணமாக ஒரு போக விளைச்சலே இன்று சவாலாகிக் போணது. 1983-ஆம் ஆண்டு என் அப்பா எங்கள் வயலில் போர்செட் போட்டார்.  அப்போது 80 அடியில் வந்த தண்ணீரை இப்போது 400 அடிக்கு மேல் தோண்டி எடுக்க வேண்டியிருக்கிறது. நருவுசு, நடவுதல, தலைகூட்டுறது போன்ற தஞ்சை கிராமத்து வார்த்தைகள் கதையெங்கும் விரவிக் கிடக்கின்றன.

”மறுபடியும் பழனி பத்தி நெனப்பு….புத்துக்குள்ளேயிருந்து வெளியேர்ற பாம்பு மாதிரி என் நெஞ்சுக்குள்ளேயிருந்து வெளிவர ஆரம்பிச்சது”

“காக்கா கரயிர சத்ததுக்கே காத தூரம் போறவ கள்ளப் புருஷன் நெனப்பு வந்தா காவேரியையும் நீந்திப் போவா”

போன்ற அருமையான உவமைகள்.

குடியானவர் புள்ளவராயருக்கும் குடி பறையன் சுக்கிரனுக்கும் இடையேனா நட்பு, உறவு அப்படியே என் அப்பா, பெரியப்பா மற்றும் எங்கள் குடி பறையன்கள் கைலாசம், கலியன் ஆகிவர்களுக்குகிடையே இருந்த உறவை ஞாபகப் படுத்துகிறது. இந்த உறவு கிராமத்து மனிதர்கள் அனைவரும் அறிந்த ஒன்று… 

அதனால் எந்த பிரச்சினையிலும் கைலாசம், கலியன் ஆகிய இருவர் மீதும் யாரும் கை வைத்தது கிடையாது. 

இப்போதும் நான் ஊருக்கு செல்லும் போது “சின்னய்யா….” என்று பாசத்துடன் அழைக்கும் கலியன் மற்றும் அவர் தண்ணி போட்டு விட்டு அப்பா, பெரியப்பா கதைகள், அவர்களின் பெருமைகளை கண்ணீருடன் சொல்வதை என்றும் என்னால் மறக்க முடியாது.

கதையில் வரும் அப்பாசாமி கண்டியர் போன்ற மிராசுவை ஒவ்வொரு கிராமத்திலும் பார்க்கலாம் !!!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

இந்த கதைகளின் நகல் பக்கங்களை அடுத்த பதிவில் முழுமையாக வெளியிடுகின்றோம்.  படிக்க விரும்புவர்கள் அதனை தரவிறக்கம் செய்து கொண்டு படிக்க முடியும்.  காரணம் இது போன்ற அரிய படைப்புக்களை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதே தமிழ்ச்செடியின் குறிக்கோள்.

2 கருத்துரைகள்:

VOICE OF INDIAN on 12/26/2012 said...

காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

நன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

-இந்தியன் குரல்

cheena (சீனா) on 1/02/2013 said...

அன்பின் தமிழ் செடி குழுவினரே ! கதை நன்று - முழுவதும் படித்தால் இரசித்து மகிழ இயலும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 

மேலே செல்