1/16/13

சா தீ - சிறுகதை அறிமுகம் வெட்டிக்காடு ரவி


தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு கிர் என்று மனதில் தோன்றியிருக்குமே? சமீப காலமாக மருத்துவர் ராமதாஸ் ஒரு பக்கம் தொடை தட்டிக் கொண்டு இருக்கிறார்.  காரணம் தர்மபுரி கலவரம் என்பது இன்னமும் அணையாத நெருப்பாக, புகையாக இன்னமும் நமக்கு தெரிந்து கொண்டே இருக்கின்றது.

இரண்டு பதிவுகளுக்கு முன்பு திரு. வெட்டிகாடு ரவி மூலம் அறிமுகமான விதையுறக்கம் என்ற கதை தொடர்பான தொடர்ச்சி பதிவு இது.

இதை வெளியிட சற்று காலதாமதம் ஆகி விட்டது. அதன் தொடர்ச்சியே இந்த பதிவு. தற்போது பெங்களூரில் வசித்துக் கொண்டிருக்கும் நண்பர் திரு. ரவி (வெட்டிக்காடு என்ற வலைதளத்தில் தனது கிராமத்து சிந்தனைகளை அப்படியே எழுதிக் கொண்டிருப்பவர்) 

திரு.ரவி அனுப்பிய இந்த கதையின் நகலை அப்படியே வலையேற்றுகின்றோம்.  

நிச்சயமாக இந்த கதை வெறும் கற்பனை அல்ல. வாழ்ந்தவரின் அனுபவம். வாழமுடியும் என்பதற்கான அத்தாட்சி பத்திரம். 

சாதி என்பது இன்றைய காலகட்டத்தில் எத்தனை கொடூரமாக மனிதர்களை பிரித்து வைத்துள்ளது என்பதை யோசிக்கும் போது முந்தைய தலைமுறை எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை நாம் யோசிக்க உதவும் ஆவணம் இது.

சமத்துவம் என்று எளிதாக பேசுகின்றோம். ஆனால் எந்த சாதியில் பிறந்தாலும் அவர்களுடன் நேசத்துடன் வாழ முடியும் என்பதை திரு. அப்பாவு வாழ்ந்ததோடு அதை எழுத்தாகவும் மாற்றி வைத்துள்ளார்.  

திரு. ரவி மூலம் தமிழ்ச்செடி இங்கே வலையேற்றுவதை பெருமையாக கருதுகின்றது.

மொத்தமாக இந்த பத்து கதைகளை விரும்பும் நேரத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்க.  

இந்த கதையின் ஆசிரியர் வெகுஜனம் அறிந்த பிரபல்யம் அல்ல. 

ஆனால் ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். 

தான் வகித்த பதவியை நூறு சதவிகிதம் நேர்மை என்ற அளவுகோலோடு மட்டும் வாழ்ந்து காட்டியவர். எளிமையான வாழ்க்கை என்றால் இன்னமும் நாம் காந்தியை தான் உதாரணம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் ஓராயிரம் மகாத்மாக்கள் திரு. அப்பாவு போன்றவர்கள் வாழ்ந்து காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தனது சாதிக்கு அப்பாற்பட்டு மற்ற அத்தனை மக்களையும் அரவணைத்து வழிகாட்டியாகவும் வாழ்ந்து காட்டியவர்.

பெயர் அப்பாவு.

மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர்.  வருமான வரித்துறை அதிகாரியாக உயர் பதவியில் வாழ்ந்தவர். இதில் என்ன சிறப்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.  ஆமாம்.  தனது கடைசி கால பதவி முடியும் தருவாயில் கூட தன்னுடைய சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தவர்.

பணத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை நேசித்தவர். அதைத்தான் தனது கதைகளில் நாயகர்களாக உலாவச் செய்துள்ளார்.

நம்பமுடியவில்லையா?

உண்மைதான்.  நல்லோர் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது இந்த அப்பாவு போன்றவர்களால் தான் இன்று வரையிலும் சாத்தியமாகிக் கொண்டு இருக்கின்றது என்பதை எத்தனை பேர்கள் அறிவார்கள்.  

ஆதிக்க சாதியில் பிறந்து, நேர்மையின் முழு உருவாக வாழ்ந்தது கூட ஆச்சரியமல்ல. 

திரு. அப்பாவு இன்றும் நல்ல உடல் உடல் மன ஆரோக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

 ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் தங்களுடன் வாழ்ந்த பாதிக்கப்பட்ட சாதி என்ற பெயரில் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களையும் சரிசமமாக அரவணைத்து அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்து காட்டியவர்.  அவர்களை கதை  மாந்தர்களாக கதாபாத்திரங்களாக மாற்றி இந்த சிறுகதை படைப்பை உருவாக்கியுள்ளார்.

அவர்களைப் பற்றித் தான் இந்த கதையில் திரு. அப்பாவு எழுதியுள்ளார்.  

இதை கதையைப் பற்றி தனது பார்வையை வெட்டிகாடு ரவி எழுதியதை படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றியும் நல்வாழ்த்துகளையும் தமிழ்ச்செடி சார்பாக திரு. அப்பாவு மற்றும் ரவிக்கு இங்கே எழுதி வைக்கின்றோம்.










திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து தமிழ்ச்செடி முதல் முறையாக நடத்தும் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா

அணைவரும் வருக.

விழா குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.

1 கருத்துரைகள்:

வவ்வால் on 1/16/2013 said...

நல்ல நூலினை வெட்டிக்காடு"ரவி" அவர்கள் அறிமுகம் செய்துள்ளார் என நினைக்கிறேன், எனக்கு ஸ்கேன் செய்த பக்கங்களை படிக்க கொஞ்சம் சிரமாக இருக்கு,எனவே பொறுமையாக படித்துப்பார்க்கிறேன்.

 

மேலே செல்