11/6/12

ஜெயகாந்தன்




தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் சாதனையாளரும். ஞானபீட பரிசு பெற்றவருமான ஜெயகாந்தன். இலக்கியம்,அரசியல்,பத்திரிக்கை,சினிமா என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர்.

1934-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் மஞ்சக்குப்பத்தில் பிறந்த இவர், தனது பன்னிரண்டு வய
தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்ப்பு கொண்டு, அதன் ஊழியராக பணியாற்றத் துவங்கி அங்கிருந்து ஒரு போராளியாக உருவானார்.

புதுமைப்பித்தனையும், பாரதியையும் தன் ஆதர்சமாக கொண்டு எழுதத் துவங்கிய ஜெயகாந்தன்,1950 முதல் சரஸ்வதி இதழிலும், ஆனந்த விகடனிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.

இவரது கதைகள் அடிநிலை மக்களின் வாழ்வை உலகறியச் செய்தன. கற்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுமரபு என்ற பெயரில் அடக்கி வைக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக ஜெயகாந்தன் உரத்த குரல் கொடுத்தார்.

அரசியல் சீரழிவுகளையும், சமூக பிரச்சனைகளையும் கூர்ந்து அவதானித்து இவர் எழுதிய கட்டுரைகள் இன்றைக்கும் விவாதப் பொருளாக இருக்கின்றன.

'சிலநேரங்களில் சில மனிதர்கள்', 'கங்கை எங்கே போகின்றாள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்', 'பாரிஸ்க்குப் போ', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', 'சுந்தர காண்டம்' இவரது முக்கிய நாவல்கள். இவரது சிறுகதைகளும் முழுத்தொகுப்பாக 'ஜெயகாந்தன் சிறுகதைகள்' என்று வெளியாகி உள்ளன. இது போலவே குறுநாவல்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

சாகித்திய அகடாமி விருது, ராஜராஜன் விருது, நேரு விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர் இவரது படைப்புகள் ஆங்கிலம், செக், ருஷ்யன், பிரெஞ்ச், உக்ரேனியன், உள்ளிட்ட அயல் மொழிகளிலும் இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

நன்றி : எஸ். இராமகிருஷ்ணன்

0 கருத்துரைகள்:

 

மேலே செல்